ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

காவிரிக் கரையின் தோட்டத்திலே கானம் வந்தது தோழியரே

பாடல்: காவிரிக் கரையின் தோட்டத்திலே கானம் வந்தது தோழியரே
திரைப் படம்: இரு வல்லவர்கள் (ஆண்டு 1966)
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள்: பி.சுசீலா மற்றும் குழுவினர்
இசை: வேதா


சுசீலா:
காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே
கானம் வந்த வழியினிலே
கண்ணன் வந்தான் தோழியரே

காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே
கானம் வந்த வழியினிலே
கண்ணன் வந்தான் தோழியரே

குழுவினர்: ஆஹா கண்ணன் வந்தான் தோழியரே

சுசீலா:
இசை ஒன்று பாடினான்
இளம் பெண்ணை நாடி
மெதுவாகப் பேசினான்
பொருளென்ன தோழி
என் சின்ன உடல் ஆட
என் கன்னி இடை ஆட
பின் மன்னவனும் கூட
நான் என்ன சொல்லத் தோழி

அடடா மன்னன் கண்ணனடி
ஆயிரம் கலையில் மன்னனடி
பருவம் கவரும் கள்ளனடி
பள்ளியில் பாடும் கவிஞனடி

குழுவினர்:
காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே

சுசீலா:
கானம் வந்த வழியினிலே
குழுவினர்:
கண்ணன் வந்தான் தோழியரே
சுசீலா:
ஓஹோ கண்ணன் வந்தான் தோழியரே

சுசீலா:
அறியாத பெண்ணிடம் அவன்
சொன்ன வார்த்தை
விரிவாகச் சொல்லவோ அறியேனே தோழி
ஹோ என்னை அவன் மெல்ல
தன் கையிரண்டில் அள்ள
நான் மெல்ல மெல்லத் துள்ள
ஓ என்னவென்று சொல்ல

அவனைக் கண்டால் வரச் சொல்லடி
அன்றைக்குத் தந்ததை தரச் சொல்லடி
தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி
தனியே நிற்பேன் எனச் சொல்லடி

குழுவினர்: 
காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே
சுசீலா:
கானம் வந்த வழியினிலே
கண்ணன் வந்தான் தோழியரே

குழுவினர்: 
காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே
சுசீலா: கானம் வந்த வழியினிலே
குழுவினர்: கண்ணன் வந்தான் தோழியரே
சுசீலா: ஆஹா கண்ணன் வந்தான் தோழியரே

-------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/sJpxBX_HgGQ
Our sincere thanks to the person who uploaded this song in the net




+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை :